படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

வேய்ன் சகோதரிகள்-விளாதிமிர் நபகோவ்

நான் அத்தகைய அற்பத்தனமான தேடுதலில் ஈடுபட்டிருக்காவிடில், கடந்த நான்கு வருடங்களாகத் தொடர்பில் இல்லாத டி.யை அன்றிரவு சந்தித்திருக்க முடியாது. டி.யைச் சந்தித்திருக்காவிடில் சிந்தியாவின் மரணத்தைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்காது.ஒரு வார காலக் கடும்...

பெண்ணுடல்மீது நிகழ்த்தப்படும் வன்முறை

(லாவண்யா சுந்தராஜனின் காயாம்பூ நாவலைப் முன்வைத்து)உலக அளவில், செயற்கைக் கருத்தரித்தலுக்கான சந்தையில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. பெரும்பாலான அயல் நாடுகளைச் சார்ந்த குழந்தையில்லாத தம்பதிகளுக்குச் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு இந்தியாதான் முதல் தேர்வு....

ஓவியக் கவிஞன்

நினைப்பில் நானொரு ஓவியன்முன்பே சொல்லி இருக்கிறேன் அல்லவா?நிஜத்திலும் நானொரு ஓவியனாகி இருந்தால்என்னவெல்லாம் வரைந்திருப்பேன்??முதலில் என் பொம்மையாய் வரைந்து தள்ளி இருப்பேன்...அதில் எனக்கு ஒற்றை றெக்கை பூட்டி இருப்பேன்...தலையில் சேவல் கொண்டை தரித்திருப்பேன்...அன்றி, ஒரு...

வீடு – நான்கு கவிதைகள்

மழை நின்றுவிட்டதுகுழந்தைகள்பள்ளிக்குச் சென்றுவிட்டனர்பெரியவர்கள்வேலைக்கு கிளம்பி விட்டனர்தளர்ந்து ஆடுகின்றனகுளிருக்கு விரிந்துதாழிடமுடியாத உள்ளறைக் கதவுகள்உலகம் அடுக்கிவைத்தபொறுப்புகளின் இடுக்கிலிருந்துஇலகுவாகி வெளிவருகிறதுஇல்லம்தினம் தினம் வெளிச்சுவற்றைமுட்டிப் பார்க்கும் பட்டாம்பூச்சியேஎங்கிருக்கிறாய் நீ?இதோ பூக்கிறதுஎன் வீடு2தனியாக இருப்பவன் கையில்ஒரு மலரைக் கொடுத்தது போலஎனக்கு...

நிலைய அதிகாரி-அலெக்ஸாண்டர் புஷ்கின்

நிலைய அதிகாரிகளைச்1 சபிக்காதவர்கள் யாராவது உண்டா? அவர்களோடு சர்ச்சையில் ஈடுபடாதவர்கள் எவராவது உண்டா? ஆத்திரத்தின் உச்சத்துக்குச் சென்று, அவர்களுடைய அராஜக நடவடிக்கை, திமிர், அலட்சியப்போக்கு போன்றவற்றைப் பற்றி, ஒன்றுக்கும் உதவாத புகார்களைப் பதிவு...

சல்பாஸ்

முருகேசன் தன்னுடைய சகா சொன்னபடி காதை, மூப்பு யானையின் தும்பிக்கையைப் போலவிருந்த, தென்னை மரத்தின் கறுத்த தண்டில் அழுத்தி வைத்து, உள்ளுக்குள் ஓடுகிற சத்தத்தைக் கேட்டான். “ஏயெப்பா கரெண்ட் அடிக்கிற மாதிரி விசுக்குன்னு...

நுண்கதைகள்

      அம்மாவின் வயிற்றுக்குள்அச்சத்தில் மீண்டும் தன் அம்மாவின் வயிற்றுக்குள்ளேயே சென்றுவிடலாம் என்று முடிவெடுத்த அந்தப் பூனைக்குட்டி வேகமாக ஓடிச்சென்று தன் அம்மாவின் வயிற்றை ஒட்டி கண்களை இருக்க மூடி படுத்துக்கொண்டது. என்ன நடந்தாலும் அம்மாவின் வயிற்றுக்குள் போகும் வரை...

மூடுதழல்

ரயில் மதுரை ஸ்டேஷனிலிருந்து கிளம்பியதிலிருந்தே தூக்கம் கெட்டுவிட்டது. இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிதான். ஏசியையும் தாண்டி உடலில் கொஞ்சம் வெக்கை இருப்பதாக உணர்ந்தேன். நல்லவேளை மேட்டுப்பாளையத்திலிருந்து திருநெல்வேலிக்குப் புதிதாக விடப்பட்டிருந்த எக்ஸ்ப்ரஸ் ரயிலில்...

மொழிக் கருப்பன்

(பெண், நிலம் மற்றும் விதைகள்)அந்திக்கு பிந்திய பொழுது. வானத்தினை அண்ணாந்து பார்த்தாள் உலகம்.  நட்சத்திரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக முளைத்துக்கொண்டிருந்தன. சற்று நேரத்திற்கெல்லாம் மண்பானையில் அனலில் கொட்டி  துவட்டும் முத்துச் சோளத்தினைப் போலப் பூத்துவிட்டிருந்தது வானம்....

அணைவடை*

“அத்தை… அத்தை… கமலி அத்தை வந்திருக்காகளாம்…” – ஒரு பெண்ணின் இளங்குரல்.“என்ன… எங்கே வந்திருக்காளாம்?” – மீனாட்சி அக்காவின் குரல் போலிருக்கிறது.“இங்கேதான்… கல்யாணத்துக்கு…”“அவ அக்காதான் அவளைக் கூப்பிடலைன்னு சொன்னாளே…”“அவ்வளவு சின்னப் பிள்ளையா இருந்துக்கிட்டு கொஞ்சம்கூட அச்சமில்லாமல் யார் கூடவும் ஒட்டமுடியலைன்னு சொந்தக்காரங்க கிட்டே நேருக்கு நேரா பேசினாள் அப்போ...”“நாமெல்லாம் பேசுறதும் பழகுறதும் போலியாயிருக்குன்னு தத்துவமா எல்லாம் பேசுவாளே...”“இங்கே...